லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் EMPIRE UNIVERSE ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரசல்ஸ் நகர ஆய்வகத்தில் விஞ்ஞானியாக பணியில் இருப்பவர் "அரிஸ்டோ". ஒருநாள் ஆய்வுக்கூடத்தில் நின்றுகொண்டு இருக்கும் சமயம், விநோதமான எண்ணங்கள் அவர் மனக்கண் முன்னே தோன்றி மறைகின்றன.
தம்மை ஒரு பழங்கால ஸ்பானிஷ் போர்வீரன் போன்று பார்க்கிறார். "கரிகாலன்" எனும் பெயர் அவர் காதுகளில் சத்தமாக கேட்கிறது.
வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, என்னவென்றே தெரியாத தகவல்களை தேடி புறப்படும் அவருக்கு, வழி நெடுகிலும் அதிசயமான நிகழ்வுகள் நேரிடுகின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்து மறைந்த தமிழ் மன்னன் ஒருவனின் தோளோடு தோள் நின்று தான் செய்த யுத்தங்களுக்கும், எதிர்காலத்தில், தான் செய்யவேண்டிய நோக்கங்களுக்கும் இடையில் உண்டான தொடர்புகள் அவரை மெய்சிலிர்க்க செய்கின்றன. ஆய்வகம் திரும்புகிறார்.
உலகத்தின் போக்கை வலிமையாக மாற்றியமைக்கும் அறிவியல் உண்மை ஒன்றைக் கண்டறிகிறார். மேலுமான ஆராய்ச்சியில், யாரும் எதிர்பாராத வகையில், மனிதர்கள் வாழும் வாய்ப்புள்ள பூமியைப் போன்ற கிரகம் ஒன்றினைக் கண்டறிகிறார்.
அதிசயம் என்னவெனில் அக்கிரகத்தில் தற்சமயம் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களில் கடந்த காலமும் நிகழ்காலமும் கலந்து சம்பவித்துக் கொண்டிருப்பது புதிராக உள்ளது. இதன் பின்னணியில் சொல்லப்படும் - யாரும் எதிர்பாராத - பிரம்மிப்பூட்டும் அற்புத அம்சமே திரைக்கதையின் கிளைமாக்ஸ்.
Uthaya Tharagai | 2024
Powered by GoDaddy
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.